Monday, November 24, 2008

ஒரு ஒருமை இருமையாகிறது

எங்கள் உரையாடல்களில்
இனி உனக்கு பதில்
நீங்கள்..!

இன்று ஒரு ஒருமை
இருமையாகிறது
வாழ்த்துக்களோ
பன்மையாய்...!

பூவுக்கு முன்னால்
பூ வாசனையாய்
அதன் வாழ்த்துக்கள்..!

நேற்றின் நாளையின்
சார்பில் ஒன்று சேர்ந்தன
இன்றின் வாழ்த்துக்கள்

இடம் பிடித்து விட்டோம்!
வாழ்த்துக்களின் வரிசையில்
நானும் நண்பர்களும்..!

எத்தனை குரல்கள்?
எத்தனை பதில்கள்?
வாழ்த்துக்களின்
வரிசைப் பதிவில்...!

இல்லற வாழ்க்கையில்
பிள்ளையாருக்கும் ஆசை?
உங்களைப் பார்த்து..!

சித்தப்பா ரொம்ப
அழகா இருக்கிறார்..!
....
சித்தி பக்கத்தில் இருந்தால்..!

உண்மைதான்...!
கொள்ளை அழகு
இருவரும்
இணைந்திருந்தால்..!

புத்திசாலி..!
நீ கேட்ட திருமண பரிசோ?
தமிழ்..!

இல்வாழ்க்கை
இனிமையாக வழி?
கொஞ்ச(ம்) முயற்சி செய்..!

ம்ம்ம்...
உங்கள் இரு குரலும்
திருக்குற(ர)லாய்
இருக்க, ஒலிக்க

அத்தனைக் குரல்களையும்
மொத்தமாய் சேர்த்து
வாழ்த்தும்


அன்பன்
உன் நண்பன்

No comments: