Monday, November 24, 2008

ப்ராக்ரஸ் ரிப்போர்ட்

நெஞ்சுக்குள்
மையம் கொண்டது
பயப்புயல்..!

இடி, மின்னல்,
அர்ச்சனை பேய்மழை
அத்தனையும்
என்மேல்

ஹோம் வொர்க் வாய்க்கால்களையும்
ஹார்ட் வொர்க் ஏரிகளையும்
தூர்வாராததே காரணம்
அத்தனை அழிவுக்கும்

மனப்பாட மெஷினாய்
இருந்துவிட்டதால்
இயற்கை கேள்விகளைப்
புரட்டும்போது
பதில்கள்
கேள்விக்குறியாய்..!
..
எங்கே போயின?
மழைநீர் சேகரிப்பாய் எழுதிய
பதில்கள்...!

அத்தனை வொர்க்குகளையும்
அம்மாவே செய்துவிட்டு
என்னிடம் எதிர்ப்பார்ப்பது
வெறும்
மதிப்பெண்கள் மட்டுமே!

கரையைக் கடந்தது
புயல்...
அரைமணி நேர
வேன் பயனத்தில் மனமெங்கும்
பாதிப்புகள்

உணவுப் பொட்டலங்களாய்
வந்து விழுந்தன
ஆறுதல் வார்த்தைகள்...!

இன்னைக்குப்
ப்ராக்ரஸ் ரிப்போர்ட்டாமே..?
அம்மாவின் குரல்.
வானிலை அறிக்கையில்
அடுத்த புயல்..!

No comments: